அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..!

Sri Lankan Tamils Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Mavai Senathirajah
By T.Thibaharan Jan 29, 2025 02:16 PM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

முள்ளிவாய்க்காலுக்கு பின்னான ஈழத் தமிழர்களின் அரசியல் தற்போது என்றுமில்லாத அளவு சீரழிவையும், சீர்குலைவையும் சந்தித்திருக்கிறது.

இதனை இந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டிருப்பதாகவும், இந்தச் சதிநடவடிக்கைகளுக்கு பின்னால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன் இருப்பதாகவும், தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை நாடாளுமன்றத்திடம் அதற்கான விசாரணை ஒன்றை நடத்துமாறு விண்ணப்பித்துள்ளார்.

இதிலிருந்து தமிழர் அரசியல் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கையறு நிலைக்குச் சென்று விட்டதனை வெளிக்காட்டி நிற்கிறது.

முதல் தமிழ் எதிர்கட்சி தலைவர் 

2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களின் ஒற்றைத் தலைமையின் கீழ் தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயக வழியில் ஒன்று திரட்டி தமிழர் தேசம் ஒருமித்ததாக தமது வாக்குகளை விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமிழ் தேசியத்தை ஜனநாயக வழிமுறையில் இந்த உலகிற்கு வழிகாட்டி இருந்தனர்.

அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! | Ilankai Tamilarasu Katchi Current Situation Essay

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி ஈழத் தமிழர் அரசியலின் தமிழ்த் தேசியத்தை தலைமை தாங்குகின்ற கட்சியாக உருவெடுத்தது. 1977ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அன்று தமிழ் மக்கள் பெறக்கூடிய 18 ஆசனங்களை பெற்றுக் கொண்டது.

இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு மாறியது. அ.அமிர்தலிங்கம் முதன்முறையாக தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலைக்கு வந்தார்.

பின்னர் தமிழர் தாயகத்தில் ஆயுதப் போராட்டத்தின் அதிவேக வளர்ச்சியும் எழுச்சியும் தமிழர் விடுதலைக்கான நம்பிக்கையை ஊட்டியதனால் ஜனநாயக வழியில் நாடாளுமன்ற அரசியல் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளையும் பெற்றுக் கொடுக்காது என்ற அடிப்படையில் ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உச்சகட்ட வளர்ச்சி அடைந்து 2002இல் இலங்கையில் சமபலம் கொண்ட இரண்டு ராணுவங்கள் உள்ளன என்ற நிலையில் இலங்கை அரசுடன் ரணில்-பிரபா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.

அந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஜனநாயக அரசியல் பலத்தை வெளிக்காட்டுவதற்கு ஒரு ஜனநாயக தேர்தலை எதிர்கொண்டு அதில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய ஒரு காலச்சூழல் ஏற்பட்டு இருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 

அத்தகைய ஒரு சூழலில் முன்னாள் ஆயுதப்போராட்ட இயக்கங்களையும், மிதவாத அரசியல் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயக அரசியலுக்கான முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை காட்டி தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டது.

அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! | Ilankai Tamilarasu Katchi Current Situation Essay

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் இலங்கை தீவுக்குள் பெறக்கூடிய அதிஉச்ச நாடாளுமன்ற உறுப்புரிமை 22, பெற்றுக் கொள்ள முடிந்தது. இரண்டாவது தடவையாக தமிழ்க்கட்சி ஒன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் வாய்ப்பையும் அது கொடுத்தது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசியக் கட்சி ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற நிலைக்கு வந்த தருணங்களை உற்று அவதானிக்க வேண்டும்.

இந்த இரண்டு காலப்பகுதியிலும் தமிழ் மக்களுடைய எழுச்சியும், தமிழ் மக்களுடைய தேசிய ஒருமைப்பாடுமே இலங்கை அரசியலில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற நிலையில் ஏறி அமர்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத்தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் பலமாக இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்தக் கட்சிக்குள் இலங்கை அரசினால் உடைவுகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சதி வேலைகள் நடைபெற்று இருப்பதையும் அவதானிக்க முடியும்.

1977ஆம் ஆண்டு தேர்தலின் பின் தமிழ்த்தேசிய தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ராஜதுரை வெளியேற்றுவதற்கான சதி வேலைகளில் உள்ளக முரண்களும் அதேநேரத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ராஜதந்திரமும் தொழில்பட்டிருக்கிறது.

உள்முரண்கலுக்குள்ளால் ராஜதுரை வெளியேற்றப்பட்டமை அவர் நாடாளுமன்றத்தில் வகை செய்யப்பட்டு இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவி பெறவேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இங்கே ராஜதுரை சுத்தமானவர் என்று நியாயப்படுத்துவதோ அல்லது அவர் துரோகம் இழைத்தவர் என்று நிறுவுவதோ இங்கே நோக்கமல்ல.

ஒழுக்க கேடுகள் 

மாறாக அன்றைய காலச் சூழலில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை அல்லது தனிநபர் ஒழுக்க கேடுகளை மிகச் சரியாக கையாளாமல், சரியான நேரத்தில் சரியானதும் பொருத்தமானதுமான முடிவுகளை எடுக்காததன் விளைவே இத்தகைய சீரழிவுக்கு காரணமாக அமைந்தது. அதேபோல விடுதலைக் கூட்டணி சரியான அரசியல் முடிவுகளை எடுக்காமல் தமிழ் மக்களுக்கு விரோதமான தமிழ் மக்கள் விரும்பத்தகாத மாவட்ட அபிவிருத்தி சபை தீர்வுக்கு சென்றமை மூலம் அமிர்தலிங்கத்திற்கு எதிரான குரல்கள் யாழ்ப்பாணத்தில் ஓங்கி ஒலிக்க தொடங்கியது.

யாழ். பல்கலைச் சமூகமும் எதிர்நிலை முன்னெடுத்ததன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி அதிவேகமாக தமிழ் மக்களிடமிருந்து ஆதரவை இழந்தது.

அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! | Ilankai Tamilarasu Katchi Current Situation Essay

அதேபோலத்தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010இல் 15ஆக குறைந்து 2020இல் 13 ஆகிய இன்று தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் பத்து ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ளன. இத்தகைய வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன? அதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக கையாண்டனவா? என்பதுவே முக்கியமானது.

2009க்கு பின்னர் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்கு சிங்கள பேரினவாதம் தமிழ் அரசியல் கட்சிகளை உடைப்பதற்கான சதி வேலைகளை செய்தது. அந்த சதி வேலைகளில் ஒரு பகுதிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அரசின் முகவர்கள் பலர் உள்நுழைக்கப்பட்டார்கள்.

அவ்வாறு உள்நுழைந்த சிங்கள அரசின் கையாட்கள் கூட்டமைப்புக்குள் இருந்த தமிழ் தேசியம் பேசுகின்ற பலரையும் வெளியேற்றுவதற்கான வேலி வெட்டி, வாய்க்கால் வெட்டி, பொறி கிடங்கு வெட்டி சதி வேலைகளில் ஈடுபட்டார்கள். அதனால் கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய தளத்தில் நின்ற பலரும் வெளியேறினார்.

இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து தமிழரசு கட்சி தனியாகவும் ஏனையவை தனித்தனியாகவும் பிரிந்து போயினர். பிரிந்தவர்களும் பின்னர் பல துண்டுகளாக சிதறுண்டு போயினர்.

பொதுவேட்பாளர் 

தற்போது தமிழரசு கட்சிக்குள்ளே இருக்கின்ற தமிழ் தேசியம் பேசுபவர்களும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயல்பட வல்லவர்களையும் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய விருப்பினை, தேசிய அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான பயணப் பாதையில் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தமிழ் புத்திஜீவிகளும், அரசியல் அறிஞர்களும், சிவில் சமூகங்களும் எடுத்த முடிவுக்கு பொது வேட்பாளராக அரியநேத்திரன் தமிழரசு கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டார்.

அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! | Ilankai Tamilarasu Katchi Current Situation Essay

தமிழரசு கட்சியின் பல முக்கியஸ்தர்களும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி செயல்பட்டனர். இப்போது அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கும், அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கும் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் சதி வேலைகள் சுமந்திரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இந்த சதி நடவடிக்கையில் சுமந்திரனுடன் கட்சியின் பதில் செயலாளராக கடமை ஆற்றுகிற சத்தியலிங்கம் பதில் தலைவராக கடமையாற்றும் சி வி கே சிவஞானமும் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்த அணியினரே தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழுவையும் தமது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சிங்கள தேசத்தின் உளவாளிகளாக தொழிற்படும் புல்லுருவிகள் தமது அரசியல் நாசகார சதி வேலைகளில் கணிசமான முன்னோறியது மாத்திரமன்றி தமிழரசு கட்சியை தனது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கு நல்ல உதாரணம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னம் அவரை தலைவர் பொறுப்பை ஏற்க விடாமல் அதனை தடுப்பதற்கான வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதை நிலுவையில் நிறுத்திவிட்டார்கள். கட்சியின் தலைவர் தேர்தல் முறையற்ற தேர்தல் என்று கூறும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள்.

இப்போது அதையும் கடந்து நாடாளுமன்றத்தில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசாரணையை செய்ய வேண்டுமென விண்ணப்பித்து நிற்க வேண்டிய ஒரு துப்பாக்கிய நிலையில் சிறிதரன் இருப்பதை பார்க்கின்ற போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கின்ற நாசகாரிகள் கை ஓங்கியிருப்பதை உணர முடிகிறது.

இங்கே தமிழரசு கட்சிக்கு தலைமை தாங்கிய சம்மந்தன், சேனாதிராஜா ஆகிய இரண்டு தலைவர்களும் சரியான நேரத்தில் சரியான முடிவை கடந்த காலத்தில் எடுத்திருந்தால் இந்தப் புல்லுருவிகள் இன்று தான்தோன்றித்தனமாக அரசியல் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு தமிழரசுக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் வெளியேறி இருக்க மாட்டார்கள்.

கட்சிக்குள்ளான முரண்பாடுகள் 

இப்போது எஞ்சி இருப்பவர்களையும் வெளியேற்றுவதற்கான அனைத்து சதிகளும் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இது ஆபத்தான ஒரு போக்கு. எனவே இத்தகைய நடைமுறை தொடர்ந்தும் இடம் பெறுவதை தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்திருக்கக் கூடாது.

அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! | Ilankai Tamilarasu Katchi Current Situation Essay

தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தமது பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது என்பது இவர்களைப் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கு அல்ல. தமிழ் மக்கள் ஒருவரை வாக்களிக்கிறார் என்றால் அது தமிழ் மக்களுடைய விடுதலை சார்ந்தும், தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்தும் தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு அவர்களுக்கு ஒரு அனுமதி பத்திரத்தை வழங்குவதாகவே அமைகிறது.

ஆனால் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுடைய நலன் சார்ந்த, தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த பேசாமல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள், வசதி வாய்ப்புகளை கோரியே அதிகம் பேசி இருக்கிறார்கள்.

இதன் விளைவு காலத்துக்கு காலம் ஒருவர் தவறிழைத்தார் என்று இன்னொருவரை தெரிவு செய்வதன் மூலம் தமிழர் தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைப் பெற்றவர்கள் தமிழர் தரப்பில் புதிய பணக்காரர்களாக உருவெடுத்தமைதான் நடந்தேறியுள்ளது. இதன் விளைவுகள்தான் தமிழர் தாயகத்தில் நாடாளுமன்ற ஆசனத்தை குறிவைத்து எண்ணற்ற சுயேட்சை குழுக்கள் தோற்றம் பெற்று இருக்கின்றன. இவையும் தமிழ்த் தேசியத்தை சிதைப்பதிலும், உடைப்பதிலும் இப்போது முனைப்பு காட்டுகின்றன.

தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதி கேட்டும், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை கேட்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நேரத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னை பாதுகாப்பதற்கு சிங்கள நாடாளுமன்றத்திடம் விசாரணை நடத்தக் கோரும் அளவிற்கு தமிழ் கட்சிகளுக்குள் இருக்கிற முரண்பாடுகள் முற்றி நாடாளுமன்றம் வரை சென்று விட்டது.

இச்சூழமைவில் தமிழரசு கட்சியின் உண்மையான விசுவாசிகளும், தமிழ் தேசியத்தை தம்முயிராக போற்றும் தமிழ் மக்களும், புத்திஜீவிகளும், சிவில் சமூகங்களும் பொறுமை காக்காமல் தமிழ்த் தேசியத்தை மீள நிலைநாட்டுவதற்கு கட்சிகளையும், மக்களையும் ஒன்று திரட்டி ஒரு குடைக்கீழ் அணி சேர்ப்பதன் மூலமே தமிழ் கட்சிகளுக்குள் ஊடுருவியிருக்கும் புல்லுரிவுகளை வெளியேற்றி துரத்தியடித்து தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை புணர் நிர்மாணம் செய்ய முடியும். அதுவே இன்றைய காலத்தின் உடனடித் தேவையும் ஆகும்.

மாவையை காண வைத்தியசாலைக்கு விரையும் அரசியல்வாதிகள்! சகோதரியின் கடுமையான எச்சரிக்கை

மாவையை காண வைத்தியசாலைக்கு விரையும் அரசியல்வாதிகள்! சகோதரியின் கடுமையான எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி

மன்னார் துப்பாக்கி சூடு: சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மன்னார் துப்பாக்கி சூடு: சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 29 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US