நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம்
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயம் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கி வந்த பருத்தித்துறை நகரின் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுமாறு இன்றையதினம் பருத்தித்துறை நகர் வர்த்தகர்களால், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பலத்த வாத பிரதிவாதங்கள்
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கும் இடையில் பலத்த வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இந்த சந்திப்பின் போது பருத்தித்துறை வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் குறித்த சந்தையை முன்பிருந்த இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எரிமலை



