வெளிநாட்டில் அரசியலை ஆரம்பித்த இளஞ்செழியன்..!
முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் வெளிநாட்டில் பேசிய விடயம் அவரது எதிர்கால அரசியலை பிரதிபலிப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஞானப்பிரகாசம் மரியசீலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் வெளிநாடொன்றில் ஆற்றிய உரையில், அரசியலை சாக்கடை என கூறிக்கொண்டிருக்காது அதனை பூக்கடையாக மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதிலிருந்தே, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது தெளிவாக தெரிகின்றது.
ஆனால், முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஒருபக்கம் தமிழரசுக் கட்சியினர் ஒருபக்கம் என இரண்டாக பிரிந்தால் தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலை இலகுவாக கைப்பற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |