வவுனியா மாவட்ட செயலகத்தின் இப்தார் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் பங்குபற்றல்
சர்வமத தலைவர்கள் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரின்
பங்குபற்றுதலுடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (27.03.2024) மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார் கலந்து கொண்டுள்ளதுடன், கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானும் பங்குபற்றியுள்ளார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
மேலும், இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |