ஐஎப்சி அதிகாரிகளுக்கும் மின்சக்தி அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு
சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) அதிகாரிகள் குழுவொன்றுக்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்புபொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம் (12.06.2023) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
மின்சார துறைக்கான முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள், திறந்த சந்தை அணுகல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதியுதவி ஆகியவை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம்
இந்த கலந்துரையாடலில் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர், உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வளங்களுக்கான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய கைத்தொழில் தலைவர் மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
International Finance Corporation (IFC) Asia Pacific Director & Regional Industry Head for Infrastructure & Natural Resources along with the IFC Country Manager visited the Ministry of Power & Energy Yesterday. We discussed the proposed electricity sector reforms, open market… pic.twitter.com/9fbH8GEp5P
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 13, 2023
