சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பணவீக்கம் உயரும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்க ஊழியர்கள் கோருவது போன்று சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பாரியளவு பணவீக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்தால் அவ்வாறு வழங்கப்படும் தொகைக்காக பணத்தை அச்சிட நேரிடும் என தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்
பணம் அச்சிட்டால் மீண்டும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும்,இதனால் சம்பளங்களை அதிகரிப்பதில் எவ்வித பலனும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணத்தை அச்சிட்டு சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமாயின் அதனை தொழிற்சங்கங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri