தேர்தல் நடத்தினால் அது ஓர் உலக சாதனை:ரஞ்சித் சியம்பலாபிட்டிய
தேர்தல் நடத்தினால் அது ஓர் உலக சாதனையேயாகும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலகில் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் பணம் அச்சிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தியது என்ற உலக சாதனையை தேர்தலை நடாத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் 2500 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டதாகவும் அதனை மறைக்கத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சிடப்பட்ட பணம், அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்

அதனால் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரையில் 80.5 பில்லியன் ரூபா செலவு செய்ய நேரிட்டுள்ளதாகவும் அதில் 26 பில்லியன் ரூபா மட்டுமே வருமானமாக கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 54 பில்லியன் ரூபா பணத்தை தேட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய செலவுகளே இவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam