இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள்: உறுதி செய்த அரசாங்கம்
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டர்.
இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை காற்றில் பறக்க விட்ட இஸ்ரேல்! காசா முற்றுகைக்கு எதிராக திரண்ட 21 நாடுகள்
இலங்கை தூதரகம்
இரண்டு இலங்கைப் பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.