இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சேவை
கிழக்கு மாகாணத்தில் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள், அத்துடன் அடையாள அட்டை கிடைக்கப்பெற்ற அடையாள அட்டைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தினை தொடர்பு கொள்ளுமாறு மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜி.அருணன் தெரிவித்துள்ளார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் 4 மணிவரை இச் சேவை இடம் பெறும்.
இது தொடர்பில் 065-2229449, 0719592224 தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தினை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 43 நிமிடங்கள் முன்
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan