இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சேவை
கிழக்கு மாகாணத்தில் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள், அத்துடன் அடையாள அட்டை கிடைக்கப்பெற்ற அடையாள அட்டைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தினை தொடர்பு கொள்ளுமாறு மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜி.அருணன் தெரிவித்துள்ளார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் 4 மணிவரை இச் சேவை இடம் பெறும்.
இது தொடர்பில் 065-2229449, 0719592224 தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தினை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
