அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல்! அவசரகால நிலை பிரகடனம்
ஐடா புயல் தாக்கத்தினால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நியூயார்க் நகரில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நியுயோர்க்கில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கனமழை பெய்து வருவதனால் ரெயில்வே சுரங்கப் பாதைகள், வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.
இதனை மோசமான காலநிலையாக நியுயோர்க் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக ப்ளாசியோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியுயோர்க்கில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஐடா புயல் தாக்கிய லூசியானா, நியுஏர்லியன்ஸ் பிராந்தியங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளின் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் மத்திய பூங்காவில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam