பொலிஸாரின் பிடியில் இருந்து போதைப் பொருள் வர்த்தகர் தப்பியோட்டம்
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரொருவர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை வீதி, ஒருகொடவத்தைப் பகுதியில் வசிக்கும் 47வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த நிலையில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் மற்றும் இன்னும் சிலர் ஒரு பொலிஸ் சார்ஜண்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரின் பாதுகாப்பில் மாளிகாகந்தை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இடைவழியில் மேற்குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை லாவகமாக ஏமாற்றி விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan