யாழில் ஐஸ்கிறீம் நிலையமொன்றின் முகம் சுழிக்கவைக்கும் செயல் : கோப்பையிலிருந்த தவளை
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14.02.2024) ஐஸ்கிறீம் உட்கொள்ள சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரிவித்ததையடுத்து குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகளவான வெப்பமான காலநிலை நிலவுவதால் சந்நிதி ஆலயத்துக்குச் செல்வோர் குளிர்பானங்களை அருகில் உள்ள உணவங்கள் மற்றும் குளிர்களி விற்பனை நிலையங்களிலேயே கொள்வனவு செய்து பருகி வருகின்றனர்.
அந்நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் குளிர்களி விற்பனை நிலையங்களின்
சுகாதாரம் மற்றும் நீரின் தூய்மை என்பவை தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள்
கவனம் செலுத்தி, சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam