ஐசிசி தரப்படுத்தலில் இலங்கை கிரிக்கெட் வீராங்கனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெடின் சிறந்த வீராங்கனையாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்படி கடந்த ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் வெளிக்காட்டிய திறமைகளை கருத்தில் கொண்டே இந்த விருதுக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை கூறியுள்ளது.
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்
கடந்த 2023 ஆம் ஆண்டில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றிய சமரி அத்தபத்து 415 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
மேலும் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் போபியே சிட்டி ஹால் என்னும், சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஹேலே மேத்யூஸும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஆடவர் கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலியும் (இந்தியா), சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை உஸ்மான் கவாஜாவும் (அவுஸ்திரேலியா) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
