பதவியை துறந்ததன் காரணம் என்ன? லொஹான் ரத்வத்தே வெளியிட்ட தகவல்
அரசாங்கத்தை சங்கடப்படுத்த விரும்பாததன் காரணமாகவே தானாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலை அமைச்சு ஒப்படைக்கப்பட்டபோது, அது ஒரு பாரிய நெருப்புக் குவியலாக இருந்தது, குறுகிய காலத்தில் தீயை அணைத்து சிறையை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டு வர முடிந்தது.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்னைப் பற்றி வெளியான சில ஊடக அறிக்கைகளால் அரசுக்கு சங்கடமாக இருக்கும் என்று கருதியதால் நானாக முன்வந்து சிறைத்துறை இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன்.
எனினும், தொடர்ந்து மாணிக்கம் மற்றும் ரத்தினத் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் பதவியை வகிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan