ரணிலை விரும்பாதவர்களும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கான காரணத்தை வெளியிட்ட ஜனாதிபதி
அரசியல் வட்டாரத்தில் பலர் தன்னை விரும்பவில்லை என்பது தமக்கு நன்றாக தெரியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வரவும் முடியும் என்ற காரணத்தினால், பகுதி அளவில் ஓய்வு பெற்றுக்கொண்டிருந்த தான் மீண்டும் களம் புகுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் மாற்றம்
அத்துடன், துரித கதியில் பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பு கிடைத்தது என்றும் இந்த அரசியல் முறைமையில் தன்னோடு இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இருக்கும் பலர் தனிப்பட்ட ரீதியில் தன்னை விரும்பவில்லை எனவும் இந்த பணியை செய்து முடிக்க தன்னால் முடியும் என்ற காரணத்தினாலே அவர்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆரம்ப வெற்றியை கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடு காணப்படுவதாகவும் அரசியல் முரண்பாடுகளை களைந்து ஆக்கபூர்வமான தீர்வு திட்டங்களை எட்டுவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
