நான்தான் உண்மையான தமிழ் தேசியவாதி: எஸ்.வியாழேந்திரன்(Video)
நான்தான் உண்மையான தமிழ் தேசியவாதியென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை பகுதியில் அமைக்கப்பட்ட சிறிய பாலம் ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வானது அதிதிகளை வரவேற்றதனைத் தொடர்ந்து பாலம் திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாண பலகையின் திரை நீக்கம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வு நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை அம்பிளாந்துறையை இணைக்கும் பிராதான வீதியில் கடுக்காமுனை பகுதியிலே இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலமானது 8.3 மீற்றர் நீளம் கொண்டதுடன் 15 மில்லியன் ரூபா நிதியில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டதுடன், பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன், வீதி
அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ரிஸ்வி, முற்போக்கு
தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் யோ.ரொஸமன், அரச உத்தியோகத்தர்கள், கட்சியின்
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri