நான் இனவாதி அல்ல : சரத் வீரசேகர பகிரங்கம்- செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயல்படும் மற்றும் இனவாதக் கருத்துக்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தான் ஒரு இனவாதி அல்ல என கூறியுள்ளார்.
பௌத்தத்தை பாதுகாப்பதற்காக தான் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இனத்துவம் என வரையறுக்கப்பட வேண்டுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் நாட்டையும் தான் ஒரே விதத்தில் நேசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம், மதவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை தற்போது பலர் ஒரு கலாச்சாரமாக பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதன் அர்த்தங்களை சரிவர புரிந்து கொள்ளாது பலர் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இனவாதம் மற்றும் இனத்துவம் என்பது இரு வேறு விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |