நான் அரசியல்வாதி அல்ல நிர்வாக அதிகாரி! யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்
நான் ஒரு நிர்வாக அதிகாரி ஆகையால் நடைமுறைப்படுத்தப்படும் சுற்று நிரூபங்களுக்கு அமையவே என்னால் செயற்பட முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ் .மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் சுற்றுநிருபங்களுக்கு அமையவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வீட்டு திட்டங்களுக்கான தெரிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் 12.03.2021,24.04.2021,11.05.2021,19.05.2021,03.07.2021 ஆகிய திகதிகளில் தெளிவான சுற்றறிக்கைகள் மூலம் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பில் ஏற்கனவே பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றது. ஏனெனில் மக்கள் தமது தெரிவுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்டது.
அதன் பின்னர் சில பிரதேச செயலகங்களில் இருந்து தமது பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், தாம் தெரிவு செய்யப்படக் கூடிய தகுதி உள்ளவர்கள் புறக்கணித்து விட்டார்கள் என முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்தது.
அதனடிப்படையில் புதிய சுற்றறிக்கை மூலம் நீக்கப்பட்டவர்கள் ஏன்? நீக்கப்பட்டார்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள் எவ்வாறு? தெரிவு செய்யப்பட்டார்கள் என புள்ளி அடிப்படைகளை தெளிவுபடுத்துமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகளின் இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி காட்சிப்படுத்தப்படும். வீட்டுத்திட்டம் தொடர்பில் தற்போது எமக்குக் கிடைக்கும் பெரும்பாலான முறைப்பாடுகள் அனாமதய முறைப்பாடுகளாகக் காணப்படுகின்றன.
எமது மாவட்டத்தில் 21 ஆயிரம் வீடுகளுக்கான தேவைப்பாடு காணப்படுகின்ற நிலையில் 10 லட்சம் ரூபா பெறுமதியான 1532 வீடுகளும்,6 இலட்சம் ரூபா பெறுமதியான 630 வீடுகளுக்கு அனுமதி கிடைத்தது.
வீட்டத்திட்ட அடிக்கல் நாட்டுவது தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருக்கு மட்டுமல்ல ஏனைய மாவட்ட இணைத் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற பொதுவான நடைமுறைகளே காணப்படுகின்றன.
நான் மாவட்ட செயலாளர் என்ற வகையில் நிர்வாக நீதியான நடைமுறைகளை மட்டும் செயற்படுத்த முடியுமே தவிர அரசியல் ரீதியாக செயற்பட முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
