அரசியல் நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டே நாடாளுமன்றம் செல்கின்றேன் - ரணில்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டே நாடாளுமன்றம் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சிலருடன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கருத்துக்களை பரிமாறிக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளிலும் எதிர்க்கட்சி சரியான யோசனைகளை மாற்று வழிகளை முன்வைக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மீளவும் நாடாளுமன்றம் செல்வதற்கு எவ்வித உத்தேசமும் தமக்கு இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பலரின் வற்புறுத்தல்கள் காரணமாகவே தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு உரிய முறையில் குரல எழுப்புதற்காவே தாம் நாடாளுமன்றம் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிரபல்யம் வீழ்ச்சியடைந்து சென்ற போதிலும் எதிர்க்கட்சியினால் மாற்று வழியொன்று முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையைப் போன்று முன்னொருபோதும் பார்த்தது கிடையாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.