தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
களுத்துறை, வாதுவ பிரதேசத்தில் மனைவியின் கழுத்தை மீன் வெட்டு கத்தியால் அறுத்து கொலை செய்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இன்று மதியம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் வாதுவ, வேரகம பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
தகவல் கிடைத்ததும், பொலிஸார் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு அறையில் உள்ள படுக்கைக்கு அருகில் இரத்த வெள்ளத்தில் சடலம் கிடந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் சந்தேக நபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்து பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri