மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸில் சிக்கிய நபர்
கதிர்காமம் கொயாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த பின்னர் தலைமறைவாகி இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.
சந்தேக நபர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் சண்டையிட்ட நிலையில், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு
கைது செய்யப்பட்ட கணவர் ஒருவித விஷமருந்தியிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலந்த பிரதீப் குமார என்ற நபரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
    
     
    
     
    
     
    
     
    
    போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        