மனைவியும் மகனையும் கத்தியால் குத்திவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை
இரத்தினபுரியில் மனைவியும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் மனைவி உயிரிழந்ததுடன், மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிவிதிகல தெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் உயிரை மாய்த்துள்ளார்.
கணவனின் கொடூர செயல்
மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மூத்த மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் அந்த நபர் வீட்டின் மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
48 வயதுடைய ஆண் ஒருவரும் அவரது மனைவியான 39 வயதுடைய பெண்ணுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மகனுக்கு 18 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக இரத்தப்போக்கு
மகன் பலத்த வெட்டுக்காயம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்களுக்கு மேலும் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தற்போது உறவினர்களின் பராமரிப்பில் உள்ளனர்.
நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri