மனைவியை கடத்தி சென்ற கணவனால் ஏற்பட்ட குழப்பம்! வெளியான காரணம்
சிலாபம் - ஹலவத்த பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் (22) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஹலவத்த பகுதியில் கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு தாயின் வீட்டுக்கு சென்ற 18 வயதான இளம் மனைவியே 19 வயது கணவனால் கடந்த 19 ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தார்.
வெளியான காரணம்
குறித்த பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும், திருமண வாழ்க்கையில் விரக்தியடைந்த மனைவி கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்தமையே இந்த கடத்தலுக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான கணவர் இன்று தனது மனைவியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
குறித்த யுவதியை சந்தேகநபர் கடத்திச்சென்ற சிசிடிவி காணொளி ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
