காணித் தகராறில் உயிரிழந்த கணவன்- காயங்களுடன் உயிர் தப்பிய மனைவி
காலி- நெலுவ, மில்லவ பிரதேசத்தில் ஏற்பட்ட காணித்தகராறு ஒன்றின் நபர் ஒருவர் அடித்து கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(21.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரவக்க - பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய கடேவத்த வெலிகமகே ஜவன் என்ற முதியவரே இவ்வாறு உயிரழந்துள்ளார் என காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடும்பஸ்ர் உயிரிழப்பு
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் இணைந்து பஹல மில்லவ பிரதேசத்தில் தமக்குச் சொந்தமான காணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மொரவக்க பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், அந்த நபர் தடியால் தாக்கியதில் முதியவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மொரவக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்காக, காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்.சி. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கமைய, நெலுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பதிஜீவ தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்