குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற கணவன்: செய்திகளின் தொகுப்பு
இந்தியாவின் பெங்களூருவில் குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கோனன குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (45) - புஷ்பா (40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 2வது மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த புஷ்பா, 2 மகன்களை அழைத்து கொண்டு கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி விஜயக்குமார், புஷ்பா வீட்டிற்கு தகராறில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த விஜயக்குமார், மனைவியின் இடது கை விரலை வாயால் கடித்து வாயிலேயே போட்டு மென்று தின்றதுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இவ்வாறான தகவல்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர பிரதான செய்தி..
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri