கணவனுக்கு மனைவி கொடுத்த மனிதாபிமானமற்ற தண்டனை
மாத்தறை - வெலிகம (Matara) பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் தனது மனைவியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், நேற்று இரவு போதையில் வந்து மனைவியை தாக்க முயன்ற போது மனைவி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டு தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலின் போது மயக்கமடைந்த அவர் வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாாரம் தெரிவித்துள்ளது.
மின்கம்பத்தில் கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
