சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அராலி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் குறித்த சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்த வீதியால் வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

அமெரிக்காவின் புதிய சக்திவாய்ந்த லேசர் ஆயுதம் - கண் இமைக்கும் நேரத்தில் ட்ரோன்களை வீழ்த்தும் News Lankasri
