மனைவியால் தாக்கப்பட்ட கணவன் வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலையில் சம்பவம்!
மனைவியின் தராசு படி தாக்குதலினால் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் (10.03.2023) அதிகாலை 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - பன்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஏ.செல்வேந்திரன் என்பவரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது, வயல் வேலைக்குச் சென்ற கணவன் வீட்டுக்கு வந்தபோது, அதிகளவிலான மதுபோதையில் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கடையிலிருந்த தராசு படியை எடுத்து எறிந்து கணவனைத் தாக்கியுள்ளார்.
இதன்போது கணவன் மயங்கி விழுந்ததாகவும் இது நேரத்தில் 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும் மனைவி வைத்தியசாலை தரப்பினருக்குத் தெரிவித்துள்ளார்.
தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், குறித்து நபர் மஹதிவுல்வெவ பிரதேச
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
