கேடு விளைவிக்கும் கழிவுகள்! மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை (Photos)
சூழலை மாசடையச் செய்தால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியாது போய்விடும் என சேருவில பிரதேச செயலக நிர்வாக அதிகாரி ரேணுகா தமயந்தி தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் முகமாக சேருவில பிரதேச செயலகப் பிரிவின் சேருநுவர நகரில் இடம்பெற்ற சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக பராமரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வை ஆரம்பித்து வைத்த போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வீ எபெக்ற் (We Effect) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் சேருவில பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நேற்று (08.06.2023) நிகழ்வுகள் இடம்பெற்றன.
டெங்கு நோய்
நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சூழலுக்கு பெருத்த கேடு விளைவிக்கும் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் பலவேறு சூழல் மாசுபாட்டிற்குக் காரணமாய் இருப்பதோடு டெங்கு நோய் உற்பத்தியாவதற்கும் ஏதுவாய் அமைந்திருக்கின்றன.
எனவே, பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை நாம் படிப்படியாகக் குறைக்கவும் காலப்போக்கில் அவற்றை முற்றாகவே நிறுத்தவும் ஆயத்தமாக வேண்டும். இந்தப் பூமியைப் பாதுகாக்க முடியும் என்றார்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வேலாயுதம் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேருவில பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சிவில் பாதுகாப்புப் பிரிவு, சுற்றுச்சூழல் பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
சிரமதானத்தின் மூலம் சேருவில நகர தெருவோரங்களில் அசிரத்தையாக வீசப்பட்டுக் கிடந்த பொலித்தீன்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் அகற்றப்பட்டு நகரத் தெருமருங்குகள் துப்புரவு செய்யப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
