தனி நாடாக அதிக மனிதாபிமான உதவியை வழங்கிய நாடு
இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கடல் துறைகளின் முன்னேற்றத்திற்கு அவுஸ்திரேலியா உதவும் என அந்நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியை அவுஸ்திரேலியா புரிந்துக்கொண்டுள்ளது

இலங்கை எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அவுஸ்திரேலியா நல்ல புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனி நாடாக அதிகளவான மனிதாபிமான உதவியாக அவுஸ்திரேலியாவே 50 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் ஏனைய துறைகளுக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வை வலுப்படுத்துதல்

கடற்படை மற்றும் சட்டவிரோத சட்டவிரோத குடியேற்றவாசிகள் சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் டேவிட் ஹோலி மேலும் தெரிவித்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 12 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri