தனி நாடாக அதிக மனிதாபிமான உதவியை வழங்கிய நாடு
இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கடல் துறைகளின் முன்னேற்றத்திற்கு அவுஸ்திரேலியா உதவும் என அந்நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியை அவுஸ்திரேலியா புரிந்துக்கொண்டுள்ளது

இலங்கை எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அவுஸ்திரேலியா நல்ல புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனி நாடாக அதிகளவான மனிதாபிமான உதவியாக அவுஸ்திரேலியாவே 50 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் ஏனைய துறைகளுக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வை வலுப்படுத்துதல்

கடற்படை மற்றும் சட்டவிரோத சட்டவிரோத குடியேற்றவாசிகள் சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் டேவிட் ஹோலி மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam