தனி நாடாக அதிக மனிதாபிமான உதவியை வழங்கிய நாடு
இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கடல் துறைகளின் முன்னேற்றத்திற்கு அவுஸ்திரேலியா உதவும் என அந்நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியை அவுஸ்திரேலியா புரிந்துக்கொண்டுள்ளது

இலங்கை எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அவுஸ்திரேலியா நல்ல புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனி நாடாக அதிகளவான மனிதாபிமான உதவியாக அவுஸ்திரேலியாவே 50 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் ஏனைய துறைகளுக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வை வலுப்படுத்துதல்

கடற்படை மற்றும் சட்டவிரோத சட்டவிரோத குடியேற்றவாசிகள் சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் டேவிட் ஹோலி மேலும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam