வவுனியா பொலிஸாரின் மனித நேயமிக்க செயல்: குவியும் பாராட்டுக்கள் (PHOTOS)
வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எம்.எச்.ஐீ.சி.குமார வவுனியா நகர பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வீதியிலிருந்து கண்டெடுத்துள்ளார்.
அதன் பின்னர் அதில் இருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உரிய நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் இது தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலை வழங்கியுள்ளார்.
அதனையடுத்து உரியவர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு கையடக்க தொலைபேசியானது உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், தற்காலத்தில் இவ்வாறு நடந்து கொண்ட பொலிஸ் சார்ஜனின் செயற்பாடு பலரின் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.



பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri