ஜனாதிபதியிடம் மனித உரிமை கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை

United Human Rights Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Nov 26, 2024 05:47 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதன் மூலமும், நாட்டின் பல மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு, இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தீர்வுகாண வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின் தவறான விதிகளை அகற்றுவதற்கும், சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து தனியான பொது வழக்குகள் இயக்குநரகத்தை ஸ்தாபிப்பதற்கும், ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடுவதற்கும் அநுரகுமார உறுதியளித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் பிற அடையாளக் குற்றங்கள் குறித்து அவரது அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட விசாரணைகளை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுக்கும் எச்சரிக்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுக்கும் எச்சரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

அதேபோன்று, உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதில் முன்னைய நிர்வாகங்களின் தோல்விகளை, அநுரகுமாரவின் அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.

அந்த வகையில், நாட்டை நீண்டகாலமாக பிளவுபடுத்திய சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பாகுபாடுகளை சகித்துக்கொள்வது உட்பட, மனித உரிமைகள் பிரச்சனைகளின் கடினமான பட்டியலை ஜனாதிபதி திஸாநாயக்க எதிர்கொள்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.

அநுரகுமாரவின் புதிய நிர்வாகம், பல தசாப்தங்களாக கடுமையான மீறல்கள், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தும் முறைகேடான பாதுகாப்புப் படை நடைமுறைகளை கட்டுப்படுத்தவேண்டும் என்று மீனாட்சி கோரியுள்ளார்.

ஜனாதிபதியிடம் மனித உரிமை கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை | Human Rights Request To The President

இதேவேளை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்களை முன்னைய அரசாங்க நிர்வாகங்கள் துன்புறுத்தியுள்ளன மற்றும் அச்சுறுத்தியுள்ளன.

அதேநேரத்தில், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில், முன்னதாக விசாரணை ஆணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான சாட்சியங்களின் அடிப்படையில் ஜனாதிபதி திஸாநாயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

புதிய அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு முழுத் தடை விதிக்க வேண்டும் மற்றும் சித்திரவதையின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட மீதமுள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும்.

நீண்டகால கோரிக்கை

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் 2015-19க்கு இடையில் பகுதியளவில் விசாரணை செய்யப்பட்ட அடையாள வழக்குகள் உட்பட கடுமையான குற்றங்கள் பற்றிய நியாயமான மற்றும் முழுமையான விசாரணைகளை உறுதி செய்ய வேண்டும்.

சமூக நலச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான அமைச்சின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தை கொண்டு வரவேண்டும்.

அதேநேரம், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, இந்துக் கோயில்கள் போன்ற சிறுபான்மை மதத் தலங்களை ஆக்கிரமிக்கும் நடைமுறையை புதிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியிடம் மனித உரிமை கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை | Human Rights Request To The President

2021இல் முந்தைய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவதற்கும், திருநங்கைகளை குறிவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும்.

மேலும், பெண்கள் உரிமை இயக்கத்தின் நீண்டகால கோரிக்கையை ஆதரிக்க வேண்டும். நாட்டில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் கண்காணிப்பகம் இலங்கையின் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது.   

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி அநுரவின் கொள்கை விளக்க உரை குறித்து தமிழ் தலைவர்கள் அதிருப்தி

ஜனாதிபதி அநுரவின் கொள்கை விளக்க உரை குறித்து தமிழ் தலைவர்கள் அதிருப்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US