இலங்கை பொலிஸ்துறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
சட்ட ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டுவதற்காக, இலங்கை பொலிஸ்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு, பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் கடந்த வார இறுதியில் பாணந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்தியமைக்கான காரணங்களை நியாயப்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அந்த ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
களுத்துறை தலைமை பொலிஸ்துறை பரிசோதகர் இரண்டு பெண் பொலிஸ்துறை உத்தியோகத்தர்களை தள்ளிவிட்ட சம்பவம் குறித்தும் அமைதிப் பேரணியை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி பங்கேற்றவர்களை கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
அதற்கமைய களுத்துறையில் இருந்து புறப்பட்ட அமைதிப் பேரணி பாணந்துறையில் பொலிஸ் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதை, இன்று தமது ஆணைக்குழுவில் பாணந்துறை பொலிஸ் தலைமைப் பரிசோதகர் ஒப்புக்கொண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பேரணியை கட்டுப்படுத்தியதற்கான காரணம் யாருடைய கட்டளை அல்லது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன? என்பவை குறித்து ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் பாணந்துறை பொலிஸ் பிரிவிற்கான சிரேஷ்ட பொலிஸ்துறை அத்தியட்சகர் தேவையான கட்டளைகளை வழங்கி பேரணியில் பங்குபற்றியவர்களை பாதுகாக்க தவறியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே அண்மைக்காலங்களில் காவல்துறையினரின் பொருத்தமற்ற நடத்தை மக்களின்
நம்பிக்கையை அழித்துள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பை
விரைவாக அழித்து வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri