தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது.
நேற்றைய தினம் (26.02.2023) கொழும்பு யூனியன் பிளேஸில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் காரணமாக 28 பேர் காயமடைந்து ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான விசாரணை அறிக்கை
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி போராட்டத்தை நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவின் யூனியன் பிளேஸில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமை தொடர்பாகவே உடனடி விசாரணையை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.