நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு வாக்களிப்பது..! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்
2024 பொதுத் தேர்தல்கள் (General Election) நெருங்கி வரும் நிலையில், வாக்களிப்பது மற்றும் விருப்பமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு உள்ளதோடு, இது ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேட்சைக் குழுவிற்கு வழங்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும்
வாக்களிக்க, ஆதரிக்கும் கட்சியின் சின்னத்திற்கு அருகில் அல்லது சுயேட்சைக் குழுவின் எண் மற்றும் சின்னத்திற்கு முன்னால் 'x' குறியை இடுமாறு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அல்லது குழுவிலிருந்து மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்யலாம்.
அதன்படி, வாக்காளர்கள் வாக்குச் சீட்டின் முடிவில் ஒவ்வொரு வேட்பாளரின் எண்ணுக்கும் அடுத்ததாக 'x' குறியை இடலாம்.
எவரேனும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வாக்களித்தாலோ அல்லது 'x ' குறியைத் தவிர வேறு ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால், வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பமான பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மூன்றாம் நாளை எட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
