ரணிலின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை - இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் விசா காலத்தை 270 நாட்களில் இருந்து ஓராண்டாக நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் கட்டண அறவிடும் முறையை எளிமையாக்கவும் அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசா கட்டணத்தில் மாற்றம்

புதிய முடிவால் சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் விசா கட்டணம் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, 180 நாட்களுக்கு அறவிடப்படும் 245 அமெரிக்க டொலர் கட்டணம் 35 டொலர்களால் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், ஓராண்டு நுழைவு சுற்றுலா விசாவிற்கான கட்டணம் 685 டொரில் இருந்து 200 டொலராக பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
ரணிலின் திட்டம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த விசேட யோசனைக்கமைய, வீசா கட்டணத்தை குறைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri