தீக்கிரையான தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள்: 3 வருடங்களாக மண்டப வாழ்க்கை
இருநூறுக்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் வீடுகள் எரிந்தமையால் தமது வாழ்விடங்களை இழந்த நிலையில் மூன்று வருடங்களாக பொது சனசமூக மண்டபத்தில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தீக்கிரையான வீடுகள்

தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் 24 தொழிலாளர் குடும்பங்கள் குடியிருந்த லயன் அறைகள் மின் கசிவு காரணமாக முற்றாக எரிந்து நாசமானது.
இந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட, எந்த வசதியும் இல்லாத அப்பகுதியின் பொது கலாச்சார மண்டபத்தில், மே 29, 2019 முதல் வசித்து வருகின்றனர்.
அரசாங்கத்திடம் கோரிக்கை

பாதிக்கப்பட்ட இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மூன்று வருடங்களாக மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை, 2021ஆம் ஆண்டில் அவர்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, ஆனால் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தோட்டத்
தொழிலாளர்கள், அடிப்படை வசதிகளுடன் கூடிய தகுந்த குடியிருப்பை ஏற்படுத்தித்
தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam