ஹோட்டல்களில் உணவு கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு
உணவு பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாவாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாவாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விலை குறைப்பு
அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாவாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உணவுப்பொருட்களின் விலையினை இந்த வாரத்தில் மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri