சுகாதார நடைமுறையினை பின்பற்றாத நான்கு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! (Photos)
மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறையினை பின்பற்றாத நான்கு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
இச் சோதனை நடவடிக்கை நேற்று (03) முன்னெடுக்கப்பட்டது.
இரவு நேரங்களில் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு கையாளப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களிற்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மிதுன் ராஜ், அமிர்தாப், கிஷான் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பிரபல உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலை கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பில் ஆராய்ந்த நீதிவான் நீதிமன்றம் ஒரு உணவகத்திற்கு 60ஆயிரம் ரூபாவும் ஏனைய மூன்று உணவகங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் தண்டப்பணம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.







என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam