நாட்டில் நிலவி வரும் வெப்பநிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடும் வெப்பநிலை நிலவும் பகல் நேரத்தில் வெளிப்புற நடவடிக்கைகளை வரையறுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக காற்றின் வேகம் குறையும் எனவும், மேகக் கூட்டங்கள் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதேவேளை இன்றும் நாளையும் மாணவர்களை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

விளையாட்டுப் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam