அதிக வெப்பநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம்:மருத்துவர் ரூமி ரூபன்
அதிக வெப்பநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக காலி கராபிட்டிய மருத்துவமனையின் உளவியல் சிகிச்சைப் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றது. அநேகமான பகுதிகளில் நிலவி வரும் அதிக வெப்பநிலையானது திடீர் விபத்துக்களை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உளவியல் நோய்கள் அதிகரிக்கும்
வெப்பநிலை அதிகரிப்பினால் உளவியல் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் உளவியல் நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்பினால் உடன் தீர்மானங்களை எடுக்கும் ஆற்றல் குறையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்களும் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
