கிழக்கு மாகாணத்தில் தொடரும் உஷ்ணமான காலநிலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் உஷ்ணமான காலநிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நகரில் முக்கிய தேவைகளுக்காக வரும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிக உஷ்ணம் காரணமாக வயோதிபர்கள் நோயாளிகள் பெண்கள் சிறுவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மர நிழல்களில் ஒதுங்கி இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
விளைச்சல் பாதிப்பு
சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய பொதுமக்கள் நண்பகல் வேலைகளில் வெளியில் நடமாட வேண்டாமென தெரிவித்திருந்த போதும் அதிகமான மக்கள் நகரில் தங்களது தேவைகள் நிமித்தம் வருகை தந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
தற்போது மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலையினால் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை, மாவட்டத்தில் பயன்தரும் வாழை, மா மற்றும் தெங்கு பயிர்ச்செய்கையும் அதிக உஷ்ணம் காரணமாக பாதிப்படைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னை மரங்களின் இலைகள் கருகுவதுடன் அதன் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தேங்காயின் விலைகளும் அதிகரித்து உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
