வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மடக்கிப் பிடிப்பு
களுத்துறை, ஹொரணை - கிரேஸ்லேண்ட் தோட்டத்தில் நேற்று (05) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
அவர் ஹொரணை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு நேற்று (05) பிற்பகல் அவர் டுபாய் செல்ல முற்பட்டபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் முன்னதாகவே வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஹொரணை – கிரேஸ்லேண்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்தத் துப்பாக்கிச் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதன்போது படுகாயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார் இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
