நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி பலி
பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று (17.07.2023) ஹொரண பொலேகொட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணையில் உள்ள கடை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்த 61 வயதுடைய ஹொரணை, மேவனபலனை பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேலதிக பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் சடலம் மலசிருர ஹொரண ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அகலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
