ஹொரணையில் வர்த்தகர் ஒருவர் கடத்தல்
மாணிக்கக்கல் விற்பனை தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹொரணையில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தல்காரர்கள் வர்த்தகரை திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அடித்து, பல நாட்கள் தடுத்து வைத்துள்ளனர்.
இதன்போது வர்த்தகரின் விடுதலைக்காக 35 இலட்சம் ரூபா கப்பம் கோரி அவரது மனைவிக்கு கடத்தல்காரர்கள் தொலைபேசியில் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் வர்த்தகரின் மனைவி மொரகஹஹேன பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸாரின் ஆலோசனையின் பேரில் கப்பத் தொகையை 10 இலட்சம் ரூபாவாக குறைத்து வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது நேற்று பிற்பகல் மில்லவத்த பிரதேசத்தில் வைத்து கப்பம் பெறுவதற்காக வந்த நபர்கள் மொரகஹஹேன பொலிஸாரால் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 28 மற்றும் 45 வயதுடைய கொடதெனிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri