நேர்மையாக மட்டுமே நான் சொத்து சேர்த்தேன்! புலம்பும் முன்னாள் அமைச்சர்
தனது வீடு எரிக்கப்பட்டமை பெரும் கவலை தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மோசடி செய்யாமல் நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன சார்பில் தேசியப்பட்டியல் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவந்த அவர், கடந்த வாரம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியில் நெருக்கடி நிலை காரணமாக வெடித்த வன்முறையால் பல அரசியல் பிரமுகர்களது வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் அவர்களது உடமைகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.