கம்பஹாவில் கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் இருந்து சிகிச்சை
கம்பஹா மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு நோய் அறிகுறிகளற்ற நாற்பட்ட நோயினால் பாதிக்கப்படாதவர்களுக்கு வீட்டில் இருந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசியம் ஏற்பட்டால் மாத்திரம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் வேலைத்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணியகம் தெரிவித்துள்ளது.
அனைத்து தொற்றாளர்களையும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் நலின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் நோய் அறிகுறிகளற்ற 5 - 60 வயதிற்குட்பட்ட கொவிட் தொற்றாளர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்களின் விரும்பத்திற்கமைய மாத்திரம் வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வீடுகளில் இருக்கும் நோயாளிகள் தொடர்பில் தேசிய மட்டத்தில் கொவிட் சிகிச்சை நிலையம் 24 மணித்தியாலங்கள் முழுவதும் தயார் நிலையில் இருக்கும்.
நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் நலின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.