விடுதியை திடீரென முற்றுகையிட்ட பொலிஸார் - இரண்டு பெண்கள் கைது
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவின் கடலதெனிய பகுதியில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பெண்கள் கைது
இந்த விடுதியின் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், தகாத செயலில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த 2 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலிமத்தலாவையைச் சேர்ந்த 68 வயதுடையவர் என்றும், பெண்கள் 35 மற்றும் 48 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெவனகல மற்றும் முருத்தலாவையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri