அழிவின் விளிம்பில் இலங்கை! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்
முடிந்தால், எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (S.M. Marikkar) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு தற்போது செயற்கையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்ற போதிலும் நாட்டுக்குள் இயற்கையில் அப்படியான பலம் இல்லை.
அத்துடன் அரசாங்கம் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெற்றுக்கொண்ட கடனை பயன்படுத்தி மேற்கொண்ட தாமரை கோபுரம் போன்ற பலன் தராத செலவுகள் காரணமாக நாடு பெருளாதார ரீதியாக அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மரிக்கார் உரையாற்றும் போது ஆளும் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டு வந்ததன் காரணமாக சபையில் அமளியான நிலைமையை காணமுடிந்தது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 26 நிமிடங்கள் முன்
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri