பிரித்தானிய கடற்படையின் கடைசி கப்பல்
இந்தியாவின் மும்பையில் 1817 ஆம் ஆண்டு கட்டப்பட்ட HMS ட்ரின்கோமலி (HMS Trincomalee) போர்க்கப்பல் பிரித்தானிய கடற்படையின் கடைசிக் கப்பலாக கருதப்படுகிறது
இது இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது.
பிரித்தானிய கடற்படையின் தேசிய அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, ஹார்ட்ல்பூலில் (Hartlepool) தற்போது நிறுத்தப்பட்டுள்ள இந்த புகழ்பெற்ற கப்பல் உலகம் முழுவதும் 100,000 மைல்களுக்கு மேல் பயணம் செய்துள்ளது.
அரச கடற்படை
இந்நிலையில், குறித்த கப்பல் ஒருபோதும் போரில் ஈடுபடவில்லை, ஆனால் ரோந்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான சேவைகளை நடத்தியுள்ளது.
இப்போது ஹார்ட்ல்பூலில் நங்கூரமிடப்பட்டுள்ள HMS ட்ரின்கோமலி, 1812 இல் அரச கடற்படையால் நியமிக்கப்பட்ட இரண்டு லெடா கிளாஸ் (Leda-Class) போர்க் கப்பல்களில் ஒன்றாகும்.
இதன் பெயரான எச்எம்எஸ் ட்ரின்கோமலி என்பது 1782 ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தின் கரையோரத்தில் நடந்த (ஆங்கிலோ-பிரெஞ்சு போர் 1778-1783) திருகோணமலைப் போரை நினைவுபடுத்துகிறது.
மேலும், தேக்கு மரக் கட்டுமானத்தால் நீடித்து நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் சிதைவை எதிர்க்கும் தன்மைக்கு பெயர் பெற்ற கப்பலாக குறித்த கப்பல் விளங்குகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |